தொடக்கம் | ||
மெய் உணர்தல்
|
||
351. | பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம், மாணாப் பிறப்பு. |
351 பதிவிறக்கம் செய்யஉரை |
352. | இருள் நீங்கி இன்பம் பயக்கும்-மருள் நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு. |
352 பதிவிறக்கம் செய்யஉரை |
353. | ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து. |
353 பதிவிறக்கம் செய்யஉரை |
354. | ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே- மெய் உணர்வு இல்லாதவர்க்கு. |
354 பதிவிறக்கம் செய்யஉரை |
355. | எப் பொருள் எத் தன்மைத்துஆயினும், அப் பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. |
355 பதிவிறக்கம் செய்யஉரை |
356. | கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர், மற்று ஈண்டு வாரா நெறி. |
356 பதிவிறக்கம் செய்யஉரை |
357. | ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையா, பேர்த்து உள்ளவேண்டா பிறப்பு. |
357 பதிவிறக்கம் செய்யஉரை |
358. | பிறப்பு என்னும் பேதைமை நீங்க, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு. |
358 பதிவிறக்கம் செய்யஉரை |
359. | சார்பு உணர்ந்து, சார்பு கெட ஒழுகின், மற்று அழித்துச் சார்தரா, சார்தரும் நோய். |
359 பதிவிறக்கம் செய்யஉரை |
360. | காமம், வெகுளி, மயக்கம், இவை மூன்றன் நாமம் கெட, கெடும் நோய். |
360 பதிவிறக்கம் செய்யஉரை |