தொடக்கம் | ||
அவா அறுத்தல்
|
||
361. | 'அவா' என்ப-'எல்லா உயிர்க்கும், எஞ் ஞான்றும், தவாஅப் பிறப்பு ஈனும் வித்து'. |
361 பதிவிறக்கம் செய்யஉரை |
362. | வேண்டுங்கால், வேண்டும் பிறவாமை; மற்று அது வேண்டாமை வேண்ட, வரும். |
362 பதிவிறக்கம் செய்யஉரை |
363. | வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை; யாண்டும் அஃது ஒப்பது இல். |
363 பதிவிறக்கம் செய்யஉரை |
364. | தூஉய்மை என்பது அவா இன்மை; மற்று அது வா அய்மை வேண்ட, வரும். |
364 பதிவிறக்கம் செய்யஉரை |
365. | அற்றவர் என்பார் அவா அற்றார்; மற்றையார் அற்று ஆக அற்றது இலர். |
365 பதிவிறக்கம் செய்யஉரை |
366. | அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. |
366 பதிவிறக்கம் செய்யஉரை |
367. | அவாவினை ஆற்ற அறுப்பின், தவா வினை தான்வேண்டும் ஆற்றான் வரும். |
367 பதிவிறக்கம் செய்யஉரை |
368. | அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃது உண்டேல், தவாஅது மேன்மேல் வரும். |
368 பதிவிறக்கம் செய்யஉரை |
369. | இன்பம் இடையறாது, ஈண்டும்-அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின். |
369 பதிவிறக்கம் செய்யஉரை |
370. | ஆரா இயற்கை அவா நீப்பின், அந் நிலையே பேரா இயற்கை தரும். |
370 பதிவிறக்கம் செய்யஉரை |