தொடக்கம் | ||
இறைமாட்சி
|
||
381. | படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. |
381 பதிவிறக்கம் செய்யஉரை |
382. | அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந் நான்கும் எஞ்சாமை-வேந்தற்கு இயல்பு. |
382 பதிவிறக்கம் செய்யஉரை |
383. | தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம் மூன்றும் நீங்கா-நிலன் ஆள்பவற்கு. |
383 பதிவிறக்கம் செய்யஉரை |
384. | அறன் இழுக்காது, அல்லவை நீக்கி, மறன் இழுக்கா மானம் உடையது-அரசு. |
384 பதிவிறக்கம் செய்யஉரை |
385. | இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த வகுத்தலும், வல்லது-அரசு. |
385 பதிவிறக்கம் செய்யஉரை |
386. | காட்சிக்கு எளியன், கடுஞ் சொல்லன் அல்லனேல், மீக்கூறும், மன்னன் நிலம். |
386 பதிவிறக்கம் செய்யஉரை |
387. | இன் சொலால் ஈத்து, அளிக்க வல்லாற்குத் தன் சொலால் தான் கண்டனைத்து, இவ் உலகு. |
387 பதிவிறக்கம் செய்யஉரை |
388. | முறை செய்து காப்பாற்றும் மன்னவன், ‘மக்கட்கு இறை’ என்று வைக்கப்படும். |
388 பதிவிறக்கம் செய்யஉரை |
389. | செவி கைப்பச் சொற் பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும், உலகு. |
389 பதிவிறக்கம் செய்யஉரை |
390. | கொடை, அளி, செங்கோல், குடி-ஓம்பல், நான்கும் உடையான் ஆம், வேந்தர்க்கு ஒளி. |
390 பதிவிறக்கம் செய்யஉரை |