தொடக்கம் | ||
கல்வி
|
||
391. | கற்க, கசடு அற, கற்பவை! கற்றபின், நிற்க, அதற்குத் தக!. |
391 பதிவிறக்கம் செய்யஉரை |
392. | 'எண்' என்ப, ஏனை ‘எழுத்து’ என்ப, இவ் இரண்டும் ‘கண்’ என்ப, வாழும் உயிர்க்கு. |
392 பதிவிறக்கம் செய்யஉரை |
393. | கண் உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு புண் உடையர், கல்லாதவர். |
393 பதிவிறக்கம் செய்யஉரை |
394. | உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிதல் அனைத்தே-புலவர் தொழில். |
394 பதிவிறக்கம் செய்யஉரை |
395. | உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்; கடையரே, கல்லாதவர். |
395 பதிவிறக்கம் செய்யஉரை |
396. | தொட்டனைத்து ஊறும், மணற் கேணி;-மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும், அறிவு. |
396 பதிவிறக்கம் செய்யஉரை |
397. | யாதானும் நாடு ஆமால்; ஊர் ஆமால்; என், ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு?. |
397 பதிவிறக்கம் செய்யஉரை |
398. | ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. |
398 பதிவிறக்கம் செய்யஉரை |
399. | தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு, காமுறுவர், கற்று அறிந்தார். |
399 பதிவிறக்கம் செய்யஉரை |
400. | கேடு இல் விழுச் செல்வம் கல்வி; ஒருவற்கு மாடு அல்ல, மற்றையவை. |
400 பதிவிறக்கம் செய்யஉரை |