தொடக்கம் | ||
கல்லாமை
|
||
401. | அரங்கு இன்றி வட்டு ஆடியற்றே-நிரம்பிய நூல் இன்றிக் கோட்டி கொளல். |
401 பதிவிறக்கம் செய்யஉரை |
402. | கல்லாதான் சொல் காமுறுதல், முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று. |
402 பதிவிறக்கம் செய்யஉரை |
403. | கல்லாதவரும் நனி நல்லர்-கற்றார்முன் சொல்லாது இருக்கப்பெறின். |
403 பதிவிறக்கம் செய்யஉரை |
404. | கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும், கொள்ளார், அறிவு உடையார். |
404 பதிவிறக்கம் செய்யஉரை |
405. | கல்லா ஒருவன் தகைமை, தலைப்பெய்து சொல்லாட, சோர்வுபடும். |
405 பதிவிறக்கம் செய்யஉரை |
406. | உளர் என்னும் மாத்திரையர் அல்லால், பயவாக் களர் அனையர்-கல்லாதவர். |
406 பதிவிறக்கம் செய்யஉரை |
407. | நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் மண் மாண் புனை பாவை அற்று. |
407 பதிவிறக்கம் செய்யஉரை |
408. | நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே- கல்லார்கண் பட்ட திரு. |
408 பதிவிறக்கம் செய்யஉரை |
409. | மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்து இலர் பாடு. |
409 பதிவிறக்கம் செய்யஉரை |
410. | விலங்கொடு மக்கள் அனையர்-இலங்கு நூல் கற்றாரொடு ஏனையவர். |
410 பதிவிறக்கம் செய்யஉரை |