தொடக்கம் | ||
கேள்வி
|
||
411. | செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. |
411 பதிவிறக்கம் செய்யஉரை |
412. | செவிக்கு உணவு இல்லாத போழ்து, சிறிது, வயிற்றுக்கும் ஈயப்படும். |
412 பதிவிறக்கம் செய்யஉரை |
413. | செவியுணவின் கேள்வி உடையார், அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர், நிலத்து. |
413 பதிவிறக்கம் செய்யஉரை |
414. | கற்றிலன் ஆயினும் கேட்க; அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை. |
414 பதிவிறக்கம் செய்யஉரை |
415. | இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே- ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல். |
415 பதிவிறக்கம் செய்யஉரை |
416. | எனைத்தானும் நல்லவை கேட்க! அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். |
416 பதிவிறக்கம் செய்யஉரை |
417. | பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார்-இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர். |
417 பதிவிறக்கம் செய்யஉரை |
418. | கேட்பினும் கேளாத் தகையவே-கேள்வியால் தோட்கப் படாத செவி. |
418 பதிவிறக்கம் செய்யஉரை |
419. | நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது. |
419 பதிவிறக்கம் செய்யஉரை |
420. | செவியின் சுவை உணரா, வாய் உணர்வின், மாக்கள் அவியினும் வாழினும் என். |
420 பதிவிறக்கம் செய்யஉரை |