தொடக்கம் | ||
குற்றம் கடிதல்
|
||
431. | செருக்கும், சினமும், சிறுமையும், இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. |
431 பதிவிறக்கம் செய்யஉரை |
432. | இவறலும், மாண்பு இறந்த மானமும், மாணா உவகையும்,- ஏதம், இறைக்கு. |
432 பதிவிறக்கம் செய்யஉரை |
433. | தினைத் துணையாம் குற்றம் வரினும், பனைத் துணையாக் கொள்வர், பழி நாணுவார். |
433 பதிவிறக்கம் செய்யஉரை |
434. | குற்றமே காக்க, பொருளாக-குற்றமே, அற்றம் தரூஉம் பகை. |
434 பதிவிறக்கம் செய்யஉரை |
435. | வரும் முன்னர்க் காவாதான் வாழ்க்கை, எரி முன்னர் வைத்தூறு போல, கெடும். |
435 பதிவிறக்கம் செய்யஉரை |
436. | தன் குற்றம் நீக்கி, பிறர் குற்றம் காண்கிற்பின், என் குற்றம் ஆகும் இறைக்கு. |
436 பதிவிறக்கம் செய்யஉரை |
437. | செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும். |
437 பதிவிறக்கம் செய்யஉரை |
438. | பற்று உள்ளம் என்னும் இவறன்மை, எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று. |
438 பதிவிறக்கம் செய்யஉரை |
439. | வியவற்க, எஞ்ஞான்றும் தன்னை! நயவற்க, நன்றி பயவா வினை!. |
439 பதிவிறக்கம் செய்யஉரை |
440. | காதல காதல் அறியாமை உய்க்கிற்பின், ஏதில, ஏதிலார் நூல். |
440 பதிவிறக்கம் செய்யஉரை |