தொடக்கம் | ||
பெரியாரைத் துணைக்கோடல்
|
||
441. | அறன் அறிந்து மூத்த அறிவு உடையார் கேண்மை திறன் அறிந்து, தேர்ந்து, கொளல். |
441 பதிவிறக்கம் செய்யஉரை |
442. | உற்ற நோய் நீக்கி, உறாஅமை முன் காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். |
442 பதிவிறக்கம் செய்யஉரை |
443. | அரியவற்றுள் எல்லாம் அரிதே-பெரியாரைப் பேணித் தமராக் கொளல். |
443 பதிவிறக்கம் செய்யஉரை |
444. | தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல், வன்மையுள் எல்லாம் தலை. |
444 பதிவிறக்கம் செய்யஉரை |
445. | சூழ்வார் கண் ஆக ஒழுகலான், மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். |
445 பதிவிறக்கம் செய்யஉரை |
446. | தக்கார் இனத்தனாய், தான் ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல். |
446 பதிவிறக்கம் செய்யஉரை |
447. | இடிக்கும் துணையாரை ஆள்வாரை, யாரே, கெடுக்கும் தகைமையவர். |
447 பதிவிறக்கம் செய்யஉரை |
448. | இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும், கெடும். |
448 பதிவிறக்கம் செய்யஉரை |
449. | முதல் இலார்க்கு ஊதியம் இல்லை;-மதலை ஆம் சார்பு இலார்க்கு இல்லை, நிலை. |
449 பதிவிறக்கம் செய்யஉரை |
450. | பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே- நல்லார் தொடர் கைவிடல். |
450 பதிவிறக்கம் செய்யஉரை |