தொடக்கம் | ||
காலம் அறிதல்
|
||
481. | பகல் வெல்லும், கூகையைக் காக்கை;- இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும், பொழுது. |
481 பதிவிறக்கம் செய்யஉரை |
482. | பருவத்தொடு ஒட்ட ஒழுகல்-திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு. |
482 பதிவிறக்கம் செய்யஉரை |
483. | அரு வினை என்ப உளவோ-கருவியான் காலம் அறிந்து செயின். |
483 பதிவிறக்கம் செய்யஉரை |
484. | ஞாலம் கருதினும், கைகூடும்-காலம் கருதி, இடத்தான் செயின். |
484 பதிவிறக்கம் செய்யஉரை |
485. | காலம் கருதி இருப்பர்-கலங்காது ஞாலம் கருதுபவர். |
485 பதிவிறக்கம் செய்யஉரை |
486. | ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து. |
486 பதிவிறக்கம் செய்யஉரை |
487. | பொள்ளென ஆங்கே புறம் வேரார்; காலம் பார்த்து, உள் வேர்ப்பர், ஒள்ளியவர். |
487 பதிவிறக்கம் செய்யஉரை |
488. | செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை காணின் கிழக்காம் தலை. |
488 பதிவிறக்கம் செய்யஉரை |
489. | எய்தற்கு அரியது இயைந்தக்கால், அந் நிலையே செய்தற்கு அரிய செயல். |
489 பதிவிறக்கம் செய்யஉரை |
490. | கொக்கு ஒக்க, கூம்பும் பருவத்து; மற்று அதன் குத்து ஒக்க, சீர்த்த இடத்து. |
490 பதிவிறக்கம் செய்யஉரை |