தொடக்கம் | ||
தெரிந்து தெளிதல்
|
||
501. | அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம், நான்கின் திறம் தெரிந்து தேறப்படும். |
501 பதிவிறக்கம் செய்யஉரை |
502. | குடிப் பிறந்து, குற்றத்தின் நீங்கி, வடுப் பரியும் நாண் உடையான்கட்டே தெளிவு. |
502 பதிவிறக்கம் செய்யஉரை |
503. | அரிய கற்று, ஆசு அற்றார்கண்ணும், தெரியுங்கால் இன்மை அரிதே, வெளிறு. |
503 பதிவிறக்கம் செய்யஉரை |
504. | குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி, மிக்க கொளல்!. |
504 பதிவிறக்கம் செய்யஉரை |
505. | பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும், தத்தம் கருமமே கட்டளைக் கல். |
505 பதிவிறக்கம் செய்யஉரை |
506. | அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்று அவர் பற்று இலர்; நாணார் பழி. |
506 பதிவிறக்கம் செய்யஉரை |
507. | காதன்மை கந்தா, அறிவு அறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும். |
507 பதிவிறக்கம் செய்யஉரை |
508. | தேரான், பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். |
508 பதிவிறக்கம் செய்யஉரை |
509. | தேறற்க யாரையும், தேராது; தேர்ந்த பின், தேறுக, தேறும் பொருள். |
509 பதிவிறக்கம் செய்யஉரை |
510. | தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும், தீரா இடும்பை தரும். |
510 பதிவிறக்கம் செய்யஉரை |