தொடக்கம் | ||
தெரிந்து வினையாடல்
|
||
511. | நன்மையும் தீமையும் நாடி, நலம் புரிந்த தன்மையான் ஆளப்படும். |
511 பதிவிறக்கம் செய்யஉரை |
512. | வாரி பெருக்கி, வளம் படுத்து, உற்றவை ஆராய்வான் செய்க வினை!. |
512 பதிவிறக்கம் செய்யஉரை |
513. | அன்பு, அறிவு, தேற்றம், அவா இன்மை, இந் நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு. |
513 பதிவிறக்கம் செய்யஉரை |
514. | எனை வகையான் தேறியக்கண்ணும், வினை வகையான் வேறாகும் மாந்தர் பலர். |
514 பதிவிறக்கம் செய்யஉரை |
515. | அறிந்து, ஆற்றி, செய்கிற்பாற்கு அல்லால், வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று. |
515 பதிவிறக்கம் செய்யஉரை |
516. | செய்வானை நாடி, வினை நாடி, காலத்தோடு எய்த உணர்ந்து, செயல்!. |
516 பதிவிறக்கம் செய்யஉரை |
517. | 'இதனை, இதனால், இவன் முடிக்கும்' என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல்!. |
517 பதிவிறக்கம் செய்யஉரை |
518. | வினைக்கு உரிமை நாடிய பின்றை, அவனை அதற்கு உரியன் ஆகச் செயல். |
518 பதிவிறக்கம் செய்யஉரை |
519. | வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும், திரு. |
519 பதிவிறக்கம் செய்யஉரை |
520. | நாள்தோறும் நாடுக, மன்னன்-வினைசெய்வான் கோடாமைக் கோடாது உலகு. |
520 பதிவிறக்கம் செய்யஉரை |