தெரிந்து வினையாடல்
 
511. நன்மையும் தீமையும் நாடி, நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும்.

511

பதிவிறக்கம் செய்ய
உரை
 
512. வாரி பெருக்கி, வளம் படுத்து, உற்றவை
ஆராய்வான் செய்க வினை!.

512

பதிவிறக்கம் செய்ய
உரை
 
513. அன்பு, அறிவு, தேற்றம், அவா இன்மை, இந் நான்கும்
நன்கு உடையான்கட்டே தெளிவு.

513

பதிவிறக்கம் செய்ய
உரை
 
514. எனை வகையான் தேறியக்கண்ணும், வினை வகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

514

பதிவிறக்கம் செய்ய
உரை
 
515. அறிந்து, ஆற்றி, செய்கிற்பாற்கு அல்லால், வினைதான்
சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.

515

பதிவிறக்கம் செய்ய
உரை
 
516. செய்வானை நாடி, வினை நாடி, காலத்தோடு
எய்த உணர்ந்து, செயல்!.

516

பதிவிறக்கம் செய்ய
உரை
 
517. 'இதனை, இதனால், இவன் முடிக்கும்' என்று ஆய்ந்து,
அதனை அவன்கண் விடல்!.

517

பதிவிறக்கம் செய்ய
உரை
 
518. வினைக்கு உரிமை நாடிய பின்றை, அவனை
அதற்கு உரியன் ஆகச் செயல்.

518

பதிவிறக்கம் செய்ய
உரை
 
519. வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
நினைப்பானை நீங்கும், திரு.

519

பதிவிறக்கம் செய்ய
உரை
 
520. நாள்தோறும் நாடுக, மன்னன்-வினைசெய்வான்
கோடாமைக் கோடாது உலகு.

520

பதிவிறக்கம் செய்ய
உரை