தொடக்கம் | ||
பொச்சாவாமை
|
||
531. | இறந்த வெகுளியின் தீதே-சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு. |
531 பதிவிறக்கம் செய்யஉரை |
532. | பொச்சாப்புக் கொல்லும் புகழை-அறிவினை நிச்சம் நிரப்புக் கொன்றாங்கு. |
532 பதிவிறக்கம் செய்யஉரை |
533. | பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை; அது உலகத்து எப் பால் நூலோர்க்கும் துணிவு. |
533 பதிவிறக்கம் செய்யஉரை |
534. | அச்சம் உடையார்க்கு அரண் இல்லை; ஆங்கு இல்லை, பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. |
534 பதிவிறக்கம் செய்யஉரை |
535. | முன்னுறக் காவாது இழுக்கியான், தன் பிழை, பின் ஊறு, இரங்கிவிடும். |
535 பதிவிறக்கம் செய்யஉரை |
536. | இழுக்காமை யார்மாட்டும், என்றும், வழுக்காமை வாயின், அஃது ஒப்பது இல். |
536 பதிவிறக்கம் செய்யஉரை |
537. | அரிய என்று ஆகாத இல்லை-பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின். |
537 பதிவிறக்கம் செய்யஉரை |
538. | புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். |
538 பதிவிறக்கம் செய்யஉரை |
539. | இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக-தாம் தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து!. |
539 பதிவிறக்கம் செய்யஉரை |
540. | உள்ளியது எய்தல் எளிதுமன்-மற்றும் தான் உள்ளியது உள்ளப்பெறின். |
540 பதிவிறக்கம் செய்யஉரை |