தொடக்கம் | ||
கொடுங்கோன்மை
|
||
551. | கொலை மேற்கொண்டாரின் கொடிதே-அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து. |
551 பதிவிறக்கம் செய்யஉரை |
552. | வேலொடு நின்றான், ‘இடு’ என்றது போலும்- கோலொடு நின்றான் இரவு. |
552 பதிவிறக்கம் செய்யஉரை |
553. | நாள்தொறும் நாடி, முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும். |
553 பதிவிறக்கம் செய்யஉரை |
554. | கூழும் குடியும் ஒருங்கு இழக்கும்-கோல் கோடி, சூழாது, செய்யும் அரசு. |
554 பதிவிறக்கம் செய்யஉரை |
555. | அல்லற்பட்டு, ஆற்றாது, அழுத கண்ணீர் அன்றே- செல்வத்தைத் தேய்க்கும் படை. |
555 பதிவிறக்கம் செய்யஉரை |
556. | மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃது இன்றேல், மன்னாவாம், மன்னர்க்கு ஒளி. |
556 பதிவிறக்கம் செய்யஉரை |
557. | துளி இன்மை ஞாலத்திற்கு எற்று? அற்றே, வேந்தன் அளி இன்மை வாழும் உயிர்க்கு. |
557 பதிவிறக்கம் செய்யஉரை |
558. | இன்மையின் இன்னாது, உடைமை-முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். |
558 பதிவிறக்கம் செய்யஉரை |
559. | முறை கோடி மன்னவன் செய்யின், உறை கோடி ஒல்லாது, வானம் பெயல். |
559 பதிவிறக்கம் செய்யஉரை |
560. | ஆ பயன் குன்றும்; அறுதொழிலோர் நூல் மறப்பர்;- காவலன் காவான் எனின். |
560 பதிவிறக்கம் செய்யஉரை |