கொடுங்கோன்மை
 
551. கொலை மேற்கொண்டாரின் கொடிதே-அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து.

551

பதிவிறக்கம் செய்ய
உரை
 
552. வேலொடு நின்றான், ‘இடு’ என்றது போலும்-
கோலொடு நின்றான் இரவு.

552

பதிவிறக்கம் செய்ய
உரை
 
553. நாள்தொறும் நாடி, முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.

553

பதிவிறக்கம் செய்ய
உரை
 
554. கூழும் குடியும் ஒருங்கு இழக்கும்-கோல் கோடி,
சூழாது, செய்யும் அரசு.

554

பதிவிறக்கம் செய்ய
உரை
 
555. அல்லற்பட்டு, ஆற்றாது, அழுத கண்ணீர் அன்றே-
செல்வத்தைத் தேய்க்கும் படை.

555

பதிவிறக்கம் செய்ய
உரை
 
556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃது இன்றேல்,
மன்னாவாம், மன்னர்க்கு ஒளி.

556

பதிவிறக்கம் செய்ய
உரை
 
557. துளி இன்மை ஞாலத்திற்கு எற்று? அற்றே, வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு.

557

பதிவிறக்கம் செய்ய
உரை
 
558. இன்மையின் இன்னாது, உடைமை-முறை செய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

558

பதிவிறக்கம் செய்ய
உரை
 
559. முறை கோடி மன்னவன் செய்யின், உறை கோடி
ஒல்லாது, வானம் பெயல்.

559

பதிவிறக்கம் செய்ய
உரை
 
560. ஆ பயன் குன்றும்; அறுதொழிலோர் நூல் மறப்பர்;-
காவலன் காவான் எனின்.

560

பதிவிறக்கம் செய்ய
உரை