தொடக்கம் | ||
வெருவந்த செய்யாமை
|
||
561. | தக்காங்கு நாடி, தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. |
561 பதிவிறக்கம் செய்யஉரை |
562. | கடிது ஓச்சி, மெல்ல எறிக-நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர். |
562 பதிவிறக்கம் செய்யஉரை |
563. | வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின், ஒருவந்தம் ஒல்லைக் கெடும். |
563 பதிவிறக்கம் செய்யஉரை |
564. | 'இறை கடியன்' என்று உரைக்கும் இன்னாச் சொல் வேந்தன் உறை கடுகி ஒல்லைக் கெடும். |
564 பதிவிறக்கம் செய்யஉரை |
565. | அருஞ் செவ்வி, இன்னா முகத்தான் பெருஞ் செல்வம் பேஎய் கண்டன்னது உடைத்து. |
565 பதிவிறக்கம் செய்யஉரை |
566. | கடுஞ் சொல்லன், கண் இலன் ஆயின், நெடுஞ் செல்வம் நீடு இன்றி, ஆங்கே கெடும். |
566 பதிவிறக்கம் செய்யஉரை |
567. | கடு மொழியும், கையிகந்த தண்டமும், வேந்தன் அடு முரண் தேய்க்கும் அரம். |
567 பதிவிறக்கம் செய்யஉரை |
568. | இனத்து ஆற்றி, எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றிச் சீறின், சிறுகும் திரு. |
568 பதிவிறக்கம் செய்யஉரை |
569. | செரு வந்த போழ்தில், சிறை செய்யா வேந்தன், வெருவந்து, வெய்து கெடும். |
569 பதிவிறக்கம் செய்யஉரை |
570. | கல்லார்ப் பிணிக்கும், கடுங்கோல்; அது அல்லது இல்லை, நிலக்குப் பொறை. |
570 பதிவிறக்கம் செய்யஉரை |