தொடக்கம் | ||
ஒற்று ஆடல்
|
||
581. | ஒற்றும், உரை சான்ற நூலும், இவை இரண்டும் தெற்றென்க, மன்னவன் கண். |
581 பதிவிறக்கம் செய்யஉரை |
582. | எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல், வேந்தன் தொழில். |
582 பதிவிறக்கம் செய்யஉரை |
583. | ஒற்றினான் ஒற்றி, பொருள் தெரியா மன்னவன் கொற்றம் கொளக் கிடந்தது இல். |
583 பதிவிறக்கம் செய்யஉரை |
584. | வினைசெய்வார், தம் சுற்றம், வேண்டாதார், என்று ஆங்கு அனைவரையும் ஆராய்வது-ஒற்று. |
584 பதிவிறக்கம் செய்யஉரை |
585. | கடாஅ உருவொடு கண் அஞ்சாது, யாண்டும் உகா அமை வல்லதே-ஒற்று. |
585 பதிவிறக்கம் செய்யஉரை |
586. | துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து, ஆராய்ந்து, என் செயினும் சோர்வு இலது-ஒற்று. |
586 பதிவிறக்கம் செய்யஉரை |
587. | மறைந்தவை கேட்க வற்று ஆகி, அறிந்தவை ஐயப்பாடு இல்லதே-ஒற்று. |
587 பதிவிறக்கம் செய்யஉரை |
588. | ஒற்று ஒற்றித் தந்த பொருளையும், மற்றும் ஓர் ஒற்றினால் ஒற்றி, கொளல். |
588 பதிவிறக்கம் செய்யஉரை |
589. | ஒற்று ஒற்று உணராமை ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும். |
589 பதிவிறக்கம் செய்யஉரை |
590. | சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின், புறப்படுத்தான் ஆகும், மறை. |
590 பதிவிறக்கம் செய்யஉரை |