தொடக்கம் | ||
ஆள்வினை உடைமை
|
||
611. | அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்; பெருமை முயற்சி தரும். |
611 பதிவிறக்கம் செய்யஉரை |
612. | வினைக்கண் வினைகெடல் ஓம்பல்-வினைக் குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று, உலகு!. |
612 பதிவிறக்கம் செய்யஉரை |
613. | தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே- வேளாண்மை என்னும் செருக்கு. |
613 பதிவிறக்கம் செய்யஉரை |
614. | தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடி கை வாள் ஆண்மை போல, கெடும். |
614 பதிவிறக்கம் செய்யஉரை |
615. | இன்பம் விழையான், வினை விழைவான் தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண். |
615 பதிவிறக்கம் செய்யஉரை |
616. | முயற்சி-திருவினை ஆக்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும். |
616 பதிவிறக்கம் செய்யஉரை |
617. | 'மடி உளாள், மா முகடி' என்ப; மடி இலான் தாள் உளாள், தாமரையினாள். |
617 பதிவிறக்கம் செய்யஉரை |
618. | பொறி இன்மை யார்க்கும் பழி அன்று; அறிவு அறிந்து, ஆள்வினை இன்மை பழி. |
618 பதிவிறக்கம் செய்யஉரை |
619. | தெய்வத்தான் ஆகாதுஎனினும், முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். |
619 பதிவிறக்கம் செய்யஉரை |
620. | ஊழையும் உப்பக்கம் காண்பர்-உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர். |
620 பதிவிறக்கம் செய்யஉரை |