தொடக்கம் | ||
இடுக்கண் அழியாமை
|
||
621. | இடுக்கண் வருங்கால் நகுக! அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல். |
621 பதிவிறக்கம் செய்யஉரை |
622. | வெள்ளத்து அனைய இடும்பை, அறிவு உடையான் உள்ளத்தின் உள்ள, கெடும். |
622 பதிவிறக்கம் செய்யஉரை |
623. | இடும்பைக்கு இடும்பை படுப்பர்-இடும்பைக்கு இடும்பை படாஅதவர். |
623 பதிவிறக்கம் செய்யஉரை |
624. | மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. |
624 பதிவிறக்கம் செய்யஉரை |
625. | அடுக்கி வரினும், அழிவு இலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும். |
625 பதிவிறக்கம் செய்யஉரை |
626. | 'அற்றேம்!' என்று அல்லற்படுபவோ-'பெற்றேம்!' என்று ஓம்புதல் தேற்றாதவர். |
626 பதிவிறக்கம் செய்யஉரை |
627. | 'இலக்கம், உடம்பு இடும்பைக்கு' என்று, கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம், மேல். |
627 பதிவிறக்கம் செய்யஉரை |
628. | இன்பம் விழையான், ‘இடும்பை இயல்பு’ என்பான், துன்பம் உறுதல் இலன். |
628 பதிவிறக்கம் செய்யஉரை |
629. | இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். |
629 பதிவிறக்கம் செய்யஉரை |
630. | இன்னாமை இன்பம் எனக் கொளின், ஆகும், தன் ஒன்னார் விழையும் சிறப்பு. |
630 பதிவிறக்கம் செய்யஉரை |