தொடக்கம் | ||
வினைத் தூய்மை
|
||
651. | துணை நலம் ஆக்கம் தரூஉம்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும். |
651 பதிவிறக்கம் செய்யஉரை |
652. | என்றும் ஒருவுதல் வேண்டும்-புகழொடு நன்றி பயவா வினை. |
652 பதிவிறக்கம் செய்யஉரை |
653. | ஓஒதல் வேண்டும், ஒளி மாழ்கும் செய்வினை- ‘ஆஅதும்!’ என்னுமவர். |
653 பதிவிறக்கம் செய்யஉரை |
654. | இடுக்கண் படினும், இளிவந்த செய்யார்- நடுக்கு அற்ற காட்சியவர். |
654 பதிவிறக்கம் செய்யஉரை |
655. | 'எற்று!' என்று இரங்குவ செய்யற்க; செய்வானேல், மற்று அன்ன செய்யாமை நன்று. |
655 பதிவிறக்கம் செய்யஉரை |
656. | ஈன்றாள் பசி காண்பான் ஆயினும், செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. |
656 பதிவிறக்கம் செய்யஉரை |
657. | பழி மலைந்து எய்திய ஆக்கத்தின், சான்றோர் கழி நல்குரவே தலை. |
657 பதிவிறக்கம் செய்யஉரை |
658. | கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும், பீழை தரும். |
658 பதிவிறக்கம் செய்யஉரை |
659. | அழக் கொண்ட எல்லாம் அழப் போம்; இழப்பினும், பிற்பயக்கும், நற்பாலவை. |
659 பதிவிறக்கம் செய்யஉரை |
660. | சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல்-பசு மண்- கலத்துள் நீர் பெய்து, இரீஇயற்று. |
660 பதிவிறக்கம் செய்யஉரை |