தொடக்கம் | ||
வினைத் திட்பம்
|
||
661. | வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்; மற்றைய எல்லாம் பிற. |
661 பதிவிறக்கம் செய்யஉரை |
662. | ஊறு ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ் இரண்டின் ஆறு என்பர்-ஆய்ந்தவர் கோள். |
662 பதிவிறக்கம் செய்யஉரை |
663. | கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக் கொட்கின், எற்றா விழுமம் தரும். |
663 பதிவிறக்கம் செய்யஉரை |
664. | சொல்லுதல் யார்க்கும் எளிய; அரிய ஆம், சொல்லிய வண்ணம் செயல். |
664 பதிவிறக்கம் செய்யஉரை |
665. | வீறு எய்தி மாண்டார் வினைத் திட்பம், வேந்தன்கண் ஊறு எய்தி, உள்ளப்படும். |
665 பதிவிறக்கம் செய்யஉரை |
666. | எண்ணிய எண்ணியாங்கு எய்துப-எண்ணியார் திண்ணியர் ஆகப்பெறின். |
666 பதிவிறக்கம் செய்யஉரை |
667. | உருவு கண்டு எள்ளாமை வேண்டும்-உருள் பெருந் தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து. |
667 பதிவிறக்கம் செய்யஉரை |
668. | கலங்காது கண்ட வினைக்கண், துளங்காது தூக்கம் கடிந்து செயல். |
668 பதிவிறக்கம் செய்யஉரை |
669. | துன்பம் உறவரினும் செய்க, துணிவு ஆற்றி- இன்பம் பயக்கும் வினை. |
669 பதிவிறக்கம் செய்யஉரை |
670. | எனைத் திட்பம் எய்தியக்கண்ணும், வினைத் திட்பம் வேண்டாரை வேண்டாது, உலகு. |
670 பதிவிறக்கம் செய்யஉரை |