தொடக்கம் | ||
மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
|
||
691. | அகலாது, அணுகாது, தீக் காய்வார் போல்க- இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார். |
691 பதிவிறக்கம் செய்யஉரை |
692. | மன்னர் விழைப விழையாமை, மன்னரான் மன்னிய ஆக்கம் தரும். |
692 பதிவிறக்கம் செய்யஉரை |
693. | போற்றின் அரியவை போற்றல்-கடுத்தபின், தேற்றுதல் யார்க்கும் அரிது. |
693 பதிவிறக்கம் செய்யஉரை |
694. | செவிச் சொல்லும், சேர்ந்த நகையும், அவித்து ஒழுகல்- ஆன்ற பெரியார் அகத்து!. |
694 பதிவிறக்கம் செய்யஉரை |
695. | எப் பொருளும் ஓரார், தொடரார், மற்று அப் பொருளை விட்டக்கால் கேட்க, மறை!. |
695 பதிவிறக்கம் செய்யஉரை |
696. | குறிப்பு அறிந்து, காலம் கருதி, வெறுப்பு இல வேண்டுப, வேட்பச் சொலல்!. |
696 பதிவிறக்கம் செய்யஉரை |
697. | வேட்பன சொல்லி, வினை இல எஞ்ஞான்றும் கேட்பினும், சொல்லா விடல்!. |
697 பதிவிறக்கம் செய்யஉரை |
698. | 'இளையர், இன முறையர்' என்று இகழார், நின்ற ஒளியொடு ஒழுகப்படும். |
698 பதிவிறக்கம் செய்யஉரை |
699. | 'கொளப்பட்டேம்' என்று எண்ணி, கொள்ளாத செய்யார்- துளக்கு அற்ற காட்சியவர். |
699 பதிவிறக்கம் செய்யஉரை |
700. | பழையம் எனக் கருதி, பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். |
700 பதிவிறக்கம் செய்யஉரை |