தொடக்கம் | ||
படைச் செருக்கு
|
||
771. | என்னை முன் நில்லன்மின்-தெவ்விர்! பலர், என்னை முன் நின்று கல் நின்றவர். |
771 பதிவிறக்கம் செய்யஉரை |
772. | கான முயல் எய்த அம்பினில், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது. |
772 பதிவிறக்கம் செய்யஉரை |
773. | பேர் ஆண்மை என்ப, தறுகண்; ஒன்று உற்றக்கால், ஊராண்மை மற்று அதன் எஃகு. |
773 பதிவிறக்கம் செய்யஉரை |
774. | கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய் வேல் பறியா, நகும். |
774 பதிவிறக்கம் செய்யஉரை |
775. | விழித்த கண் வேல் கொண்டு எறிய, அழித்து இமைப்பின், ஓட்டு அன்றோ, வன்கணவர்க்கு?. |
775 பதிவிறக்கம் செய்யஉரை |
776. | விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும், தன் நாளை எடுத்து. |
776 பதிவிறக்கம் செய்யஉரை |
777. | சுழலும் இசை வேண்டி, வேண்டா உயிரார் கழல் யாப்புக் காரிகை நீர்த்து. |
777 பதிவிறக்கம் செய்யஉரை |
778. | உறின், உயிர் அஞ்சா மறவர், இறைவன் செறினும், சீர் குன்றல் இலர். |
778 பதிவிறக்கம் செய்யஉரை |
779. | இழைத்தது இகவாமைச் சாவாரை, யாரே, பிழைத்தது ஒறுக்கிற்பவர்?. |
779 பதிவிறக்கம் செய்யஉரை |
780. | புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின், சாக்காடு இரந்து கோள்-தக்கது உடைத்து. |
780 பதிவிறக்கம் செய்யஉரை |