தொடக்கம் | ||
பழைமை
|
||
801. | 'பழைமை எனப்படுவது யாது?' எனின், யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. |
801 பதிவிறக்கம் செய்யஉரை |
802. | நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை; மற்று அதற்கு உப்பு ஆதல் சான்றோர் கடன். |
802 பதிவிறக்கம் செய்யஉரை |
803. | பழகிய நட்பு எவன் செய்யும்-கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை?. |
803 பதிவிறக்கம் செய்யஉரை |
804. | விழைதகையான் வேண்டியிருப்பர்-கெழுதகையான் கேளாது நட்டார் செயின். |
804 பதிவிறக்கம் செய்யஉரை |
805. | பேதைமை ஒன்றோ, பெருங்கிழமை என்று உணர்க- நோ தக்க நட்டார் செயின்!. |
805 பதிவிறக்கம் செய்யஉரை |
806. | எல்லைக்கண் நின்றார் துறவார்-தொலைவிடத்தும், தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. |
806 பதிவிறக்கம் செய்யஉரை |
807. | அழிவந்த செய்யினும், அன்பு அறார்-அன்பின் வழிவந்த கேண்மையவர். |
807 பதிவிறக்கம் செய்யஉரை |
808. | கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள், இழுக்கம் நட்டார் செயின். |
808 பதிவிறக்கம் செய்யஉரை |
809. | கெடாஅர், வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும், உலகு. |
809 பதிவிறக்கம் செய்யஉரை |
810. | விழையார் விழையப்படுப-பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார். |
810 பதிவிறக்கம் செய்யஉரை |