தொடக்கம் | ||
பேதைமை
|
||
831. | பேதைமை என்பது ஒன்று; ‘யாது?’ எனின், ஏதம் கொண்டு, ஊதியம் போகவிடல். |
831 பதிவிறக்கம் செய்யஉரை |
832. | பேதைமையுள் எல்லாம் பேதைமை, காதன்மை கை அல்லதன்கண் செயல். |
832 பதிவிறக்கம் செய்யஉரை |
833. | நாணாமை, நாடாமை, நார் இன்மை, யாது ஒன்றும் பேணாமை,-பேதை தொழில். |
833 பதிவிறக்கம் செய்யஉரை |
834. | ஓதி உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும், தான் அடங்காப் பேதையின் பேதையார் இல். |
834 பதிவிறக்கம் செய்யஉரை |
835. | ஒருமைச் செயல் ஆற்றும், பேதை-எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு!. |
835 பதிவிறக்கம் செய்யஉரை |
836. | பொய்படும் ஒன்றோ; புனை பூணும்;-கை அறியாப் பேதை வினை மேற்கொளின். |
836 பதிவிறக்கம் செய்யஉரை |
837. | ஏதிலார் ஆர, தமர் பசிப்பர்-பேதை பெருஞ் செல்வம் உற்றக்கடை. |
837 பதிவிறக்கம் செய்யஉரை |
838. | மையல் ஒருவன் களித்தற்றால்-பேதை தன் கை ஒன்று உடைமை பெறின். |
838 பதிவிறக்கம் செய்யஉரை |
839. | பெரிது இனிது, பேதையார் கேண்மை-பிரிவின்கண் பீழை தருவது ஒன்று இல்!. |
839 பதிவிறக்கம் செய்யஉரை |
840. | கழாஅக் கால் பள்ளியுள் வைத்தற்றால்-சான்றோர் குழா அத்துப் பேதை புகல். |
840 பதிவிறக்கம் செய்யஉரை |