தொடக்கம் | ||
பகைத் திறம் தெரிதல்
|
||
871. | பகை என்னும் பண்புஇலதனை, ஒருவன் நகையேயும், வேண்டற்பாற்று அன்று. |
871 பதிவிறக்கம் செய்யஉரை |
872. | வில் ஏர் உழவர் பகை கொளினும், கொள்ளற்க- சொல் ஏர் உழவர் பகை!. |
872 பதிவிறக்கம் செய்யஉரை |
873. | ஏமுற்றவரினும் ஏழை-தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன். |
873 பதிவிறக்கம் செய்யஉரை |
874. | பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன் தகைமைக்கண் தங்கிற்று, உலகு. |
874 பதிவிறக்கம் செய்யஉரை |
875. | தன் துணை இன்றால்; பகை இரண்டால்; தான் ஒருவன் இன் துணையாக் கொள்க, அவற்றின் ஒன்று!. |
875 பதிவிறக்கம் செய்யஉரை |
876. | தேறினும், தேறாவிடினும், அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்!. |
876 பதிவிறக்கம் செய்யஉரை |
877. | நோவற்க, நொந்தது அறியார்க்கு! மேவற்க, மென்மை, பகைவரகத்து!. |
877 பதிவிறக்கம் செய்யஉரை |
878. | வகை அறிந்து, தற் செய்து, தற் காப்ப, மாயும்- பகைவர்கண் பட்ட செருக்கு. |
878 பதிவிறக்கம் செய்யஉரை |
879. | இளைதாக முள்மரம் கொல்க- களையுநர் கை கொல்லும் காழ்த்த இடத்து!. |
879 பதிவிறக்கம் செய்யஉரை |
880. | உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற-செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார். |
880 பதிவிறக்கம் செய்யஉரை |