தொடக்கம் | ||
உட்பகை
|
||
881. | நிழல் நீரும் இன்னாத இன்னா-தமர் நீரும், இன்னா ஆம், இன்னா செயின். |
881 பதிவிறக்கம் செய்யஉரை |
882. | வாள்போல் பகைவரை அஞ்சற்க! அஞ்சுக, கேள்போல் பகைவர் தொடர்பு. |
882 பதிவிறக்கம் செய்யஉரை |
883. | உட்பகை அஞ்சித் தற் காக்க! உலைவு இடத்து, மட்பகையின் மாணத் தெறும். |
883 பதிவிறக்கம் செய்யஉரை |
884. | மனம் மாணா உட்பகை தோன்றின், இனம் மாணா ஏதம் பலவும் தரும். |
884 பதிவிறக்கம் செய்யஉரை |
885. | உறல் முறையான் உட்பகை தோன்றின், இறல் முறையான் ஏதம் பலவும் தரும். |
885 பதிவிறக்கம் செய்யஉரை |
886. | ஒன்றாமை ஒன்றியார்கண் படின், எஞ்ஞான்றும், பொன்றாமை ஒன்றல் அரிது. |
886 பதிவிறக்கம் செய்யஉரை |
887. | செப்பின் புணர்ச்சிபோல் கூடினும், கூடாதே- உட்பகை உற்ற குடி. |
887 பதிவிறக்கம் செய்யஉரை |
888. | அரம் பொருத பொன் போல, தேயும் உரம், பொருது- உட்பகை உற்ற குடி. |
888 பதிவிறக்கம் செய்யஉரை |
889. | எட் பகவு அன்ன சிறுமைத்தேஆயினும், உட்பகை, உள்ளது ஆம், கேடு. |
889 பதிவிறக்கம் செய்யஉரை |
890. | உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-குடங்கருள் பாம்போடு உடன் உறைந்தற்று. |
890 பதிவிறக்கம் செய்யஉரை |