தொடக்கம் | ||
பெரியாரைப் பிழையாமை
|
||
891. | ஆற்றுவார் ஆற்றல் இகழாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. |
891 பதிவிறக்கம் செய்யஉரை |
892. | பெரியாரைப் பேணாது ஒழுகின், பெரியாரால் பேரா இடும்பை தரும். |
892 பதிவிறக்கம் செய்யஉரை |
893. | கெடல்வேண்டின், கேளாது செய்க-அடல் வேண்டின், ஆற்றுபவர்கண் இழுக்கு!. |
893 பதிவிறக்கம் செய்யஉரை |
894. | கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்-ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். |
894 பதிவிறக்கம் செய்யஉரை |
895. | யாண்டுச் சென்று யாண்டும் உளர் ஆகார்-வெந் துப்பின் வேந்து செறப்பட்டவர். |
895 பதிவிறக்கம் செய்யஉரை |
896. | எரியான் சுடப்படினும், உய்வு உண்டாம்; உய்யார், பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார். |
896 பதிவிறக்கம் செய்யஉரை |
897. | வகை மாண்ட வாழ்க்கையும், வான் பொருளும் என் ஆம்- தகை மாண்ட தக்கார் செறின்?. |
897 பதிவிறக்கம் செய்யஉரை |
898. | குன்று அன்னார் குன்ற மதிப்பின், குடியொடு, நின்றன்னார் மாய்வர், நிலத்து. |
898 பதிவிறக்கம் செய்யஉரை |
899. | ஏந்திய கொள்கையார் சீறின், இடை முரிந்து, வேந்தனும் வேந்து கெடும். |
899 பதிவிறக்கம் செய்யஉரை |
900. | இறந்து அமைந்த சார்புஉடையர் ஆயினும், உய்யார்- சிறந்து அமைந்த சீரார் செறின். |
900 பதிவிறக்கம் செய்யஉரை |