தொடக்கம் | ||
பெண்வழிச் சேறல்
|
||
901. | மனை விழைவார் மாண் பயன் எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது. |
901 பதிவிறக்கம் செய்யஉரை |
902. | பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக, நாணுத் தரும். |
902 பதிவிறக்கம் செய்யஉரை |
903. | இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை, எஞ்ஞான்றும், நல்லாருள் நாணுத் தரும். |
903 பதிவிறக்கம் செய்யஉரை |
904. | மனையாளை அஞ்சும் மறுமைஇலாளன் வினை ஆண்மை வீறு எய்தல் இன்று. |
904 பதிவிறக்கம் செய்யஉரை |
905. | இல்லாளை அஞ்சுவான், அஞ்சும் மற்று எஞ்ஞான்றும், நல்லார்க்கு நல்ல செயல். |
905 பதிவிறக்கம் செய்யஉரை |
906. | இமையாரின் வாழினும், பாடு இலரே-இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர். |
906 பதிவிறக்கம் செய்யஉரை |
907. | பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின், நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து. |
907 பதிவிறக்கம் செய்யஉரை |
908. | நட்டார் குறை முடியார்; நன்று ஆற்றார்;-நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர். |
908 பதிவிறக்கம் செய்யஉரை |
909. | அறவினையும், ஆன்ற பொருளும், பிற வினையும்,- பெண் ஏவல் செய்வார்கண் இல். |
909 பதிவிறக்கம் செய்யஉரை |
910. | எண் சேர்ந்த நெஞ்சத்து, இடன் உடையார்க்கு, எஞ்ஞான்றும், பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல். |
910 பதிவிறக்கம் செய்யஉரை |