| தொடக்கம் | ||
| கள் உண்ணாமை
|
||
| 921. | உட்கப் படாஅர், ஒளி இழப்பர், எஞ்ஞான்றும்- கள்-காதல் கொண்டு ஒழுகுவார். |
921 பதிவிறக்கம் செய்யஉரை |
| 922. | உண்ணற்க, கள்ளை! உணில், உண்க, சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார்!. |
922 பதிவிறக்கம் செய்யஉரை |
| 923. | ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என், மற்றுச் சான்றோர் முகத்துக் களி!. |
923 பதிவிறக்கம் செய்யஉரை |
| 924. | நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்-கள் என்னும் பேணாப் பெருங் குற்றத்தார்க்கு. |
924 பதிவிறக்கம் செய்யஉரை |
| 925. | கை அறியாமை உடைத்தே-பொருள் கொடுத்து, மெய் அறியாமை கொளல். |
925 பதிவிறக்கம் செய்யஉரை |
| 926. | துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர்;-எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் கள் உண்பவர். |
926 பதிவிறக்கம் செய்யஉரை |
| 927. | உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர்-எஞ்ஞான்றும் கள் ஒற்றிக் கண் சாய்பவர். |
927 பதிவிறக்கம் செய்யஉரை |
| 928. | களித்து அறியேன் என்பது கைவிடுக-நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்!. |
928 பதிவிறக்கம் செய்யஉரை |
| 929. | களித்தானைக் காரணம் காட்டுதல்-கீழ் நீர்க் குளித்தானைத் தீத் துரீஇயற்று. |
929 பதிவிறக்கம் செய்யஉரை |
| 930. | கள் உண்ணாப் போழ்தில், களித்தானைக் காணுங்கால், உள்ளான்கொல், உண்டதன் சோர்வு!. |
930 பதிவிறக்கம் செய்யஉரை |