தொடக்கம் | ||
மருந்து
|
||
941. | மிகினும் குறையினும், நோய் செய்யும்-நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று. |
941 பதிவிறக்கம் செய்யஉரை |
942. | மருந்து என வேண்டாவாம், யாக்கைக்கு- அருந்தியது, அற்றது போற்றி உணின். |
942 பதிவிறக்கம் செய்யஉரை |
943. | அற்றால், அளவு அறிந்து உண்க! அஃது உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு. |
943 பதிவிறக்கம் செய்யஉரை |
944. | அற்றது அறிந்து, கடைப்பிடித்து, மாறு அல்ல துய்க்க, துவரப் பசித்து!. |
944 பதிவிறக்கம் செய்யஉரை |
945. | மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின், ஊறுபாடு இல்லை, உயிர்க்கு. |
945 பதிவிறக்கம் செய்யஉரை |
946. | இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல், நிற்கும், கழி பேர் இரையான்கண் நோய். |
946 பதிவிறக்கம் செய்யஉரை |
947. | தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின், நோய் அளவு இன்றிப் படும். |
947 பதிவிறக்கம் செய்யஉரை |
948. | நோய் நாடி நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி, வாய்ப்பச் செயல்!. |
948 பதிவிறக்கம் செய்யஉரை |
949. | உற்றான் அளவும், பிணி அளவும், காலமும், கற்றான், கருதிச் செயல்!. |
949 பதிவிறக்கம் செய்யஉரை |
950. | உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான், என்று அப் பால் நாற் கூற்றே-மருந்து. |
950 பதிவிறக்கம் செய்யஉரை |