தொடக்கம் | ||
குடிமை
|
||
951. | இற் பிறந்தார்கண் அல்லது இல்லை-இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. |
951 பதிவிறக்கம் செய்யஉரை |
952. | ஒழுக்கமும், வாய்மையும், நாணும், இம் மூன்றும் இழுக்கார்-குடிப் பிறந்தார். |
952 பதிவிறக்கம் செய்யஉரை |
953. | நகை, ஈகை, இன் சொல், இகழாமை, நான்கும் வகை என்ப-வாய்மைக் குடிக்கு. |
953 பதிவிறக்கம் செய்யஉரை |
954. | அடுக்கிய கோடி பெறினும், குடிப் பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். |
954 பதிவிறக்கம் செய்யஉரை |
955. | வழங்குவது உள்வீழ்ந்தக்கண்ணும், பழங்குடி பண்பின் தலைப் பிரிதல் இன்று. |
955 பதிவிறக்கம் செய்யஉரை |
956. | சலம் பற்றிச் சால்பு இல செய்யார்-'மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும்' என்பார். |
956 பதிவிறக்கம் செய்யஉரை |
957. | குடிப்பிறந்தார்கண்-விளங்கும்-குற்றம், விசும்பின் மதிக்கண் மறுப்போல், உயர்ந்து. |
957 பதிவிறக்கம் செய்யஉரை |
958. | நலத்தின்கண் நார் இன்மை தோன்றின், அவனைக் குலத்தின்கண் ஐயப்படும். |
958 பதிவிறக்கம் செய்யஉரை |
959. | நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்;-காட்டும், குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல். |
959 பதிவிறக்கம் செய்யஉரை |
960. | நலம் வேண்டின், நாண் உடைமை வேண்டும்; குலம் வேண்டின், வேண்டுக, யார்க்கும் பணிவு!. |
960 பதிவிறக்கம் செய்யஉரை |