தொடக்கம் | ||
சான்றாண்மை
|
||
981. | கடன் என்ப, நல்லவை எல்லாம்-கடன் அறிந்து, சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு. |
981 பதிவிறக்கம் செய்யஉரை |
982. | குண நலம், சான்றோர் நலனே; பிற நலம் எந் நலத்து உள்ளதூஉம் அன்று. |
982 பதிவிறக்கம் செய்யஉரை |
983. | அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு ஐந்து-சால்பு ஊன்றிய தூண். |
983 பதிவிறக்கம் செய்யஉரை |
984. | கொல்லா நலத்தது, நோன்மை;-பிறர் தீமை சொல்லா நலத்தது, சால்பு. |
984 பதிவிறக்கம் செய்யஉரை |
985. | ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அது சான்றோர் மாற்றாரை மாற்றும் படை. |
985 பதிவிறக்கம் செய்யஉரை |
986. | 'சால்பிற்குக் கட்டளை யாது?' எனின், தோல்வி துலை அல்லார்கண்ணும் கொளல். |
986 பதிவிறக்கம் செய்யஉரை |
987. | இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால், என்ன பயத்ததோ, சால்பு?. |
987 பதிவிறக்கம் செய்யஉரை |
988. | இன்மை ஒருவற்கு இளிவு அன்று-சால்பு என்னும் திண்மை உண்டாகப்பெறின். |
988 பதிவிறக்கம் செய்யஉரை |
989. | ஊழி பெயரினும், தாம் பெயரார்-சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார். |
989 பதிவிறக்கம் செய்யஉரை |
990. | சான்றவர் சான்றாண்மை குன்றின், இரு நிலம்தான் தாங்காது மன்னோ, பொறை!. |
990 பதிவிறக்கம் செய்யஉரை |