தொடக்கம் | ||
நன்றி இல் செல்வம்
|
||
1001. | வைத்தான், வாய் சான்ற பெரும் பொருள்; அஃது உண்ணான் செத்தான், செயக்கிடந்தது இல். |
1001 பதிவிறக்கம் செய்யஉரை |
1002. | 'பொருளான் ஆம், எல்லாம்' என்று, ஈயாது இவறும் மருளான், ஆம், மாணாப் பிறப்பு. |
1002 பதிவிறக்கம் செய்யஉரை |
1003. | ஈட்டம் இவறி, இசை வேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. |
1003 பதிவிறக்கம் செய்யஉரை |
1004. | எச்சம் என்று என் எண்ணும் கொல்லோ-ஒருவரால் நச்சப் படாஅதவன்!. |
1004 பதிவிறக்கம் செய்யஉரை |
1005. | கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு, அடுக்கிய கோடி உண்டாயினும், இல். |
1005 பதிவிறக்கம் செய்யஉரை |
1006. | ஏதம், பெருஞ் செல்வம்-தான் துவ்வான், தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான். |
1006 பதிவிறக்கம் செய்யஉரை |
1007. | அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம்- மிகு நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று. |
1007 பதிவிறக்கம் செய்யஉரை |
1008. | நச்சப்படாதவன் செல்வம்-நடுவூருள் நச்சு மரம் பழுத்தற்று. |
1008 பதிவிறக்கம் செய்யஉரை |
1009. | அன்பு ஒரீஇ, தற் செற்று, அறம் நோக்காது, ஈட்டிய ஒண் பொருள் கொள்வார், பிறர். |
1009 பதிவிறக்கம் செய்யஉரை |
1010. | சீருடைச் செல்வர் சிறு துனி-மாரி வறம் கூர்ந்தனையது உடைத்து. |
1010 பதிவிறக்கம் செய்யஉரை |