தொடக்கம் | ||
குடி செயல் வகை
|
||
1021. | 'கருமம் செய'-ஒருவன்-’கைதூவேன்’ என்னும் பெருமையின், பீடு உடையது இல். |
1021 பதிவிறக்கம் செய்யஉரை |
1022. | ஆள்வினையும், ஆன்ற அறிவும், என இரண்டின் நீள் வினையான், நீளும் குடி. |
1022 பதிவிறக்கம் செய்யஉரை |
1023. | 'குடி செய்வல்' என்னும் ஒருவற்கு, தெய்வம் மடி தற்று, தான் முந்துறும். |
1023 பதிவிறக்கம் செய்யஉரை |
1024. | சூழாமல் தானே முடிவு எய்தும்-தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு. |
1024 பதிவிறக்கம் செய்யஉரை |
1025. | குற்றம் இலனாய், குடி செய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும், உலகு. |
1025 பதிவிறக்கம் செய்யஉரை |
1026. | நல் ஆண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த இல் ஆண்மை ஆக்கிக்கொளல். |
1026 பதிவிறக்கம் செய்யஉரை |
1027. | அமரகத்து வன்கண்ணர் போல, தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே, பொறை. |
1027 பதிவிறக்கம் செய்யஉரை |
1028. | குடி செய்வார்க்கு இல்லை, பருவம்; மடி செய்து, மானம் கருத, கெடும். |
1028 பதிவிறக்கம் செய்யஉரை |
1029. | இடும்பைக்கே கொள்கலம்கொல்லோ-குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு!. |
1029 பதிவிறக்கம் செய்யஉரை |
1030. | இடுக்கண் கால் கொன்றிட, வீழும்-அடுத்து ஊன்றும் நல் ஆள் இலாத குடி. |
1030 பதிவிறக்கம் செய்யஉரை |