தொடக்கம் | ||
உழவு
|
||
1031. | சுழன்றும் ஏர்ப் பின்னது, உலகம்; அதனால், உழந்தும் உழவே தலை. |
1031 பதிவிறக்கம் செய்யஉரை |
1032. | உழுவார் உலகத்தார்க்கு ஆணி-அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. |
1032 பதிவிறக்கம் செய்யஉரை |
1033. | உழுது, உண்டு, வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம் தொழுது, உண்டு, பின் செல்பவர். |
1033 பதிவிறக்கம் செய்யஉரை |
1034. | பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பர்- அலகு உடை நீழலவர். |
1034 பதிவிறக்கம் செய்யஉரை |
1035. | இரவார்; இரப்பார்க்கு ஒன்று ஈவர்-கரவாது கை செய்து ஊண் மாலையவர். |
1035 பதிவிறக்கம் செய்யஉரை |
1036. | உழவினார் கைம்மடங்கின், இல்லை-'விழைவதூஉம் விட்டேம்' என்பார்க்கு நிலை. |
1036 பதிவிறக்கம் செய்யஉரை |
1037. | தொடிப் புழுதி கஃசா உணக்கின், பிடித்து எருவும் வேண்டாது, சாலப் படும். |
1037 பதிவிறக்கம் செய்யஉரை |
1038. | ஏரினும் நன்றால், எரு இடுதல்; கட்டபின், நீரினும் நன்று, அதன் காப்பு. |
1038 பதிவிறக்கம் செய்யஉரை |
1039. | செல்லான் கிழவன் இருப்பின், நிலம் புலந்து இல்லாளின் ஊடிவிடும். |
1039 பதிவிறக்கம் செய்யஉரை |
1040. | 'இலம்!' என்று அசைஇ இருப்பாரைக் காணின், நிலம் என்னும் நல்லாள் நகும். |
1040 பதிவிறக்கம் செய்யஉரை |