தொடக்கம் | ||
நல்குரவு
|
||
1041. | 'இன்மையின் இன்னாதது யாது?' எனின், இன்மையின் இன்மையே இன்னாதது. |
1041 பதிவிறக்கம் செய்யஉரை |
1042. | இன்மை என ஒரு பாவி, மறுமையும் இம்மையும் இன்றி, வரும். |
1042 பதிவிறக்கம் செய்யஉரை |
1043. | தொல் வரவும் தோலும் கெடுக்கும், தொகையாக- நல்குரவு என்னும் நசை. |
1043 பதிவிறக்கம் செய்யஉரை |
1044. | இற்பிறந்தார்கண்ணேயும், இன்மை, இளி வந்த சொல் பிறக்கும் சோர்வு தரும். |
1044 பதிவிறக்கம் செய்யஉரை |
1045. | நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். |
1045 பதிவிறக்கம் செய்யஉரை |
1046. | நற் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார் சொல் பொருட் சோர்வு படும். |
1046 பதிவிறக்கம் செய்யஉரை |
1047. | அறம் சாரா நல்குரவு, ஈன்ற தாயானும், பிறன் போல நோக்கப்படும். |
1047 பதிவிறக்கம் செய்யஉரை |
1048. | இன்றும் வருவது கொல்லோ-நெருநலும் கொன்றது போலும் நிரப்பு!. |
1048 பதிவிறக்கம் செய்யஉரை |
1049. | நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; நிரப்பினுள் யாது ஒன்றும் கண்பாடு அரிது. |
1049 பதிவிறக்கம் செய்யஉரை |
1050. | துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. |
1050 பதிவிறக்கம் செய்யஉரை |