தொடக்கம் | ||
இரவு
|
||
1051. | இரக்க, இரத்தக்கார்க் காணின்! கரப்பின், அவர் பழி தம் பழி அன்று. |
1051 பதிவிறக்கம் செய்யஉரை |
1052. | இன்பம் ஒருவற்கு இரத்தல்-இரந்தவை துன்பம் உறாஅ வரின். |
1052 பதிவிறக்கம் செய்யஉரை |
1053. | கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து. |
1053 பதிவிறக்கம் செய்யஉரை |
1054. | இரத்தலும் ஈதலே போலும்-கரத்தல் கனவினும் தேற்றாதார்மாட்டு. |
1054 பதிவிறக்கம் செய்யஉரை |
1055. | கரப்பு இலார் வையகத்து உண்மையான், கண் நின்று, இரப்பவர் மேற்கொள்வது. |
1055 பதிவிறக்கம் செய்யஉரை |
1056. | கரப்பு இடும்பை இல்லாரைக் காணின், நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். |
1056 பதிவிறக்கம் செய்யஉரை |
1057. | இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின், மகிழ்ந்து உள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து. |
1057 பதிவிறக்கம் செய்யஉரை |
1058. | இரப்பாரை இல்லாயின், ஈர்ங்கண் மா ஞாலம் மரப்பாவை சென்று வந்தற்று. |
1058 பதிவிறக்கம் செய்யஉரை |
1059. | ஈவார்கண் என் உண்டாம், தோற்றம்-இரந்து கோள் மேவார் இலாஅக்கடை?. |
1059 பதிவிறக்கம் செய்யஉரை |
1060. | இரப்பான் வெகுளாமை வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் சாலும் கரி. |
1060 பதிவிறக்கம் செய்யஉரை |