இரவு அச்சம்
 
1061. கரவாது, உவந்து ஈயும் கண் அன்னார்கண்ணும்
இரவாமை கோடி உறும்.

1061

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1062. இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து
கெடுக, உலகு இயற்றியான்!.

1062

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1063. 'இன்மை இடும்பை இரந்து தீர்வாம்' என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.

1063

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1064. இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே-இடம் இல்லாக்
காலும், இரவு ஒல்லாச் சால்பு.

1064

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1065. தெள் நீர் அடு புற்கை ஆயினும், தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல்.

1065

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1066. 'ஆவிற்கு நீர்' என்று இரப்பினும், நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.

1066

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1067. இரப்பன், இரப்பாரை எல்லாம்-’இரப்பின்,
கரப்பார் இரவன்மின்’ என்று.

1067

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1068. இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும்
பார் தாக்க, பக்கு விடும்.

1068

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1069. இரவு உள்ள, உள்ளம் உருகும்; கரவு உள்ள,
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

1069

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1070. கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்கொல்லோ-இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்!.

1070

பதிவிறக்கம் செய்ய
உரை