தொடக்கம் | ||
இரவு அச்சம்
|
||
1061. | கரவாது, உவந்து ஈயும் கண் அன்னார்கண்ணும் இரவாமை கோடி உறும். |
1061 பதிவிறக்கம் செய்யஉரை |
1062. | இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக, உலகு இயற்றியான்!. |
1062 பதிவிறக்கம் செய்யஉரை |
1063. | 'இன்மை இடும்பை இரந்து தீர்வாம்' என்னும் வன்மையின் வன்பாட்டது இல். |
1063 பதிவிறக்கம் செய்யஉரை |
1064. | இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே-இடம் இல்லாக் காலும், இரவு ஒல்லாச் சால்பு. |
1064 பதிவிறக்கம் செய்யஉரை |
1065. | தெள் நீர் அடு புற்கை ஆயினும், தாள் தந்தது உண்ணலின் ஊங்கு இனியது இல். |
1065 பதிவிறக்கம் செய்யஉரை |
1066. | 'ஆவிற்கு நீர்' என்று இரப்பினும், நாவிற்கு இரவின் இளிவந்தது இல். |
1066 பதிவிறக்கம் செய்யஉரை |
1067. | இரப்பன், இரப்பாரை எல்லாம்-’இரப்பின், கரப்பார் இரவன்மின்’ என்று. |
1067 பதிவிறக்கம் செய்யஉரை |
1068. | இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும் பார் தாக்க, பக்கு விடும். |
1068 பதிவிறக்கம் செய்யஉரை |
1069. | இரவு உள்ள, உள்ளம் உருகும்; கரவு உள்ள, உள்ளதூஉம் இன்றிக் கெடும். |
1069 பதிவிறக்கம் செய்யஉரை |
1070. | கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்கொல்லோ-இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்!. |
1070 பதிவிறக்கம் செய்யஉரை |