தொடக்கம் | ||
தகை அணங்கு உறுத்தல்
|
||
1081. | அணங்குகொல்! ஆய் மயில்கொல்லோ!- கனங்குழை- மாதர்கொல்! மாலும், என் நெஞ்சு. |
1081 பதிவிறக்கம் செய்யஉரை |
1082. | நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல்-தாக்கு அணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து. |
1082 பதிவிறக்கம் செய்யஉரை |
1083. | பண்டு அறியேன், ‘கூற்று’ என்பதனை; இனி அறிந்தேன்; பெண்தகையான் பேர் அமர்க் கட்டு. |
1083 பதிவிறக்கம் செய்யஉரை |
1084. | கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான், பெண் தகைப் பேதைக்கு, அமர்த்தன கண். |
1084 பதிவிறக்கம் செய்யஉரை |
1085. | கூற்றமோ! கண்ணோ! பிணையோ!- மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து. |
1085 பதிவிறக்கம் செய்யஉரை |
1086. | கொடும் புருவம் கோடா மறைப்பின், நடுங்கு அஞர் செய்யலமன், இவள் கண். |
1086 பதிவிறக்கம் செய்யஉரை |
1087. | கடாஅக் களிற்றின்மேல் கண் படாம்-மாதர் படாஅ முலைமேல் துகில்!. |
1087 பதிவிறக்கம் செய்யஉரை |
1088. | ஒள் நுதற்கு, ஓஒ! உடைந்ததே-ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு!. |
1088 பதிவிறக்கம் செய்யஉரை |
1089. | பிணை ஏர் மட நோக்கும், நாணும் உடையாட்கு அணி எவனோ, ஏதில தந்து?. |
1089 பதிவிறக்கம் செய்யஉரை |
1090. | உண்டார்கண் அல்லது, அடு நறா, காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று. |
1090 பதிவிறக்கம் செய்யஉரை |