புணர்ச்சி மகிழ்தல்
 
1101. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறியும் ஐம்புலனும்
ஒண்டொடிகண்ணே உள.

1101

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1102. பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

1102

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1103. தாம் வீழ்வார் மென் தோள்-துயிலின் இனிதுகொல்-
தாமரைக்கண்ணான் உலகு?.

1103

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1104. நீங்கின் தெறூஉம், குறுகுங்கால் தண்ணென்னும்,
தீ யாண்டுப் பெற்றாள், இவள்?.

1104

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1105. வேட்ட பொழுதின் அவை அவை போலுமே-
தோட்டார் கதுப்பினாள் தோள்.

1105

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1106. உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலான், பேதைக்கு
அமிழ்தின் இயன்றன, தோள்.

1106

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1107. தம் இல் இருந்து, தமது பாத்து உண்டற்றால்-
அம் மா அரிவை முயக்கு.

1107

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1108. வீழும் இருவர்க்கு இனிதே-வளி இடை
போழப் படாஅ முயக்கு.

1108

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1109. ஊடல், உணர்தல், புணர்தல் இவை-காமம்
கூடியார் பெற்ற பயன்.

1109

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1110. அறிதோறு அறியாமை கண்டற்றால்-காமம்
செறிதோறும் சேயிழைமாட்டு.

1110

பதிவிறக்கம் செய்ய
உரை