நலம் புனைந்து உரைத்தல்
 
1111. நல்நீரை! வாழி!-அனிச்சமே!-நின்னினும்
மெல் நீரள், யாம் வீழ்பவள்.

1111

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1112. மலர் காணின் மையாத்தி-நெஞ்சே!-'இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும்!' என்று.

1112

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1113. முறி, மேனி, முத்தம், முறுவல்; வெறி, நாற்றம்;
வேல், உண்கண்;-வேய்த்தோளவட்கு.

1113

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1114. காணின், குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்-
‘மாணிழை கண் ஒவ்வேம்!’ என்று.

1114

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1115. ( அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள்; நுசுப்பிற்கு
நல்ல படாஅ, பறை.

1115

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1116. மதியும் மடந்தை முகனும் அறியா,
பதியின் கலங்கிய, மீன்.

1116

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1117. அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல
மறு உண்டோ, மாதர் முகத்து!.

1117

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1118. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்,
காதலை-வாழி, மதி!.

1118

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1119. மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்திஆயின்,
பலர் காணத் தோன்றல்!-மதி!.

1119

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1120. அனிச்சமும் அன்னத்தின் தூவியும், மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

1120

பதிவிறக்கம் செய்ய
உரை