தொடக்கம் | ||
நலம் புனைந்து உரைத்தல்
|
||
1111. | நல்நீரை! வாழி!-அனிச்சமே!-நின்னினும் மெல் நீரள், யாம் வீழ்பவள். |
1111 பதிவிறக்கம் செய்யஉரை |
1112. | மலர் காணின் மையாத்தி-நெஞ்சே!-'இவள் கண் பலர் காணும் பூ ஒக்கும்!' என்று. |
1112 பதிவிறக்கம் செய்யஉரை |
1113. | முறி, மேனி, முத்தம், முறுவல்; வெறி, நாற்றம்; வேல், உண்கண்;-வேய்த்தோளவட்கு. |
1113 பதிவிறக்கம் செய்யஉரை |
1114. | காணின், குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்- ‘மாணிழை கண் ஒவ்வேம்!’ என்று. |
1114 பதிவிறக்கம் செய்யஉரை |
1115. | ( அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள்; நுசுப்பிற்கு நல்ல படாஅ, பறை. |
1115 பதிவிறக்கம் செய்யஉரை |
1116. | மதியும் மடந்தை முகனும் அறியா, பதியின் கலங்கிய, மீன். |
1116 பதிவிறக்கம் செய்யஉரை |
1117. | அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல மறு உண்டோ, மாதர் முகத்து!. |
1117 பதிவிறக்கம் செய்யஉரை |
1118. | மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல், காதலை-வாழி, மதி!. |
1118 பதிவிறக்கம் செய்யஉரை |
1119. | மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்திஆயின், பலர் காணத் தோன்றல்!-மதி!. |
1119 பதிவிறக்கம் செய்யஉரை |
1120. | அனிச்சமும் அன்னத்தின் தூவியும், மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். |
1120 பதிவிறக்கம் செய்யஉரை |