தொடக்கம் | ||
காதல் - சிறப்பு உரைத்தல்
|
||
1121. | பாலொடு தேன் கலந்தற்றே-பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்!. |
1121 பதிவிறக்கம் செய்யஉரை |
1122. | உடம்பொடு உயிரிடை என்ன, மற்று அன்ன- மடந்தையொடு எம்மிடை நட்பு. |
1122 பதிவிறக்கம் செய்யஉரை |
1123. | கருமணியின் பாவாய்! நீ போதாய்-யாம் வீழும் திருநுதற்கு இல்லை, இடம்!. |
1123 பதிவிறக்கம் செய்யஉரை |
1124. | வாழ்தல் உயிர்க்கு அன்னள், ஆயிழை; சாதல் அதற்கு அன்னள், நீங்கும் இடத்து. |
1124 பதிவிறக்கம் செய்யஉரை |
1125. | உள்ளுவன்மன், யான் மறப்பின்; மறப்பு அறியேன், ஒள் அமர்க் கண்ணாள் குணம். |
1125 பதிவிறக்கம் செய்யஉரை |
1126. | கண்ணுள்ளின் போகார்; இமைப்பின் பருவரார்; நுண்ணியர் எம் காதலவர். |
1126 பதிவிறக்கம் செய்யஉரை |
1127. | கண் உள்ளார் காதலவராக, கண்ணும் எழுதேம், கரப்பாக்கு அறிந்து. |
1127 பதிவிறக்கம் செய்யஉரை |
1128. | நெஞ்சத்தார் காதலவராக, வெய்து உண்டல் அஞ்சுதும், வேபாக்கு அறிந்து. |
1128 பதிவிறக்கம் செய்யஉரை |
1129. | இமைப்பின், கரப்பாக்கு அறிவல்; அனைத்திற்கே, 'ஏதிலர்’ என்னும், இவ் ஊர். |
1129 பதிவிறக்கம் செய்யஉரை |
1130. | உவந்து உறைவர், உள்ளத்துள் என்றும்; 'இகந்து உறைவர்; ஏதிலர்’ என்னும், இவ் ஊர். |
1130 பதிவிறக்கம் செய்யஉரை |