தொடக்கம் | ||
நாணுத் துறவு உரைத்தல்
|
||
1131. | காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம மடல் அல்லது இல்லை, வலி. |
1131 பதிவிறக்கம் செய்யஉரை |
1132. | நோனா உடம்பும் உயிரும், மடல் ஏறும்- நாணினை நீக்கி நிறுத்து. |
1132 பதிவிறக்கம் செய்யஉரை |
1133. | நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன்; இன்று உடையேன், காமுற்றார் ஏறும் மடல். |
1133 பதிவிறக்கம் செய்யஉரை |
1134. | காமக் கடும் புனல் உய்க்குமே-நாணொடு நல் ஆண்மை என்னும் புணை. |
1134 பதிவிறக்கம் செய்யஉரை |
1135. | தொடலைக் குறுந்தொடி தந்தாள், மடலொடு மாலை உழக்கும் துயர். |
1135 பதிவிறக்கம் செய்யஉரை |
1136. | மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற;- படல் ஒல்லா, பேதைக்கு என் கண். |
1136 பதிவிறக்கம் செய்யஉரை |
1137. | கடல் அன்ன காமம் உழந்தும், மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல். |
1137 பதிவிறக்கம் செய்யஉரை |
1138. | 'நிறை அரியர்; மன் அளியர்' என்னாது, காமம் மறை இறந்து, மன்று படும். |
1138 பதிவிறக்கம் செய்யஉரை |
1139. | 'அறிகிலார், எல்லாரும்' என்றே, என் காமம் மறுகில் மறுகும், மருண்டு. |
1139 பதிவிறக்கம் செய்யஉரை |
1140. | யாம் கண்ணின் காண நகுப, அறிவு இல்லார்- யாம் பட்ட தாம் படாவாறு. |
1140 பதிவிறக்கம் செய்யஉரை |