தொடக்கம் | ||
அலர் அறிவுறுத்தல்
|
||
1141. | அலர் எழ, ஆர் உயிர் நிற்கும்; அதனைப் பலர் அறியார், பாக்கியத்தால். |
1141 பதிவிறக்கம் செய்யஉரை |
1142. | மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது, அலர் எமக்கு ஈந்தது, இவ் ஊர். |
1142 பதிவிறக்கம் செய்யஉரை |
1143. | உறாஅதோ, ஊர் அறிந்த கௌவை? அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. |
1143 பதிவிறக்கம் செய்யஉரை |
1144. | கவ்வையான் கவ்விது, காமம்; அது இன்றேல், தவ்வென்னும், தன்மை இழந்து. |
1144 பதிவிறக்கம் செய்யஉரை |
1145. | களித்தொறும் கள் உண்டல் வேட்டற்றால்-காமம் வெளிப்படும்தோறும் இனிது. |
1145 பதிவிறக்கம் செய்யஉரை |
1146. | கண்டது மன்னும் ஒரு நாள்; அலர் மன்னும் திங்களைப் பாம்பு கொண்டற்று. |
1146 பதிவிறக்கம் செய்யஉரை |
1147. | ஊரவர் கௌவை எருவாக,அன்னை சொல் நீராக, நீளும்-இந் நோய். |
1147 பதிவிறக்கம் செய்யஉரை |
1148. | 'நெய்யால் எரி நுதுப்பேம்' என்றற்றால்-'கௌவையான் காமம் நுதுப்பேம்' எனல். |
1148 பதிவிறக்கம் செய்யஉரை |
1149. | அலர் நாண ஒல்வதோ-'அஞ்சல் ஓம்பு!' என்றார் பலர் நாண நீத்தக்கடை?. |
1149 பதிவிறக்கம் செய்யஉரை |
1150. | தாம் வேண்டின் நல்குவர், காதலர்; யாம் வேண்டும் கௌவை எடுக்கும், இவ் ஊர். |
1150 பதிவிறக்கம் செய்யஉரை |