தொடக்கம் | ||
பிரிவு ஆற்றாமை
|
||
1151. | செல்லாமை உண்டேல், எனக்கு உரை; மற்று நின் வல்வரவு, வாழ்வார்க்கு உரை. |
1151 பதிவிறக்கம் செய்யஉரை |
1152. | இன்கண் உடைத்து அவர் பார்வல்; பிரிவு அஞ்சும் புன்கண் உடைத்தால், புணர்வு. |
1152 பதிவிறக்கம் செய்யஉரை |
1153. | அரிதுஅரோ, தேற்றம்-அறிவுடையார்கண்ணும் பிரிவு ஓர் இடத்து உண்மையான். |
1153 பதிவிறக்கம் செய்யஉரை |
1154. | அளித்து, ‘அஞ்சல்!’ என்றவர் நீப்பின், தெளித்த சொல் தேறியார்க்கு உண்டோ, தவறு?. |
1154 பதிவிறக்கம் செய்யஉரை |
1155. | ஓம்பின், அமைந்தார் பிரிவு ஓம்பல்! மற்று அவர் நீங்கின், அரிதால், புணர்வு!. |
1155 பதிவிறக்கம் செய்யஉரை |
1156. | பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின், அரிது, ‘அவர் நல்குவர்’ என்னும் நசை. |
1156 பதிவிறக்கம் செய்யஉரை |
1157. | துறைவன் துறந்தமை தூற்றாகொல்-முன்கை இறை இறவாநின்ற வளை!. |
1157 பதிவிறக்கம் செய்யஉரை |
1158. | இன்னாது, இனன் இல் ஊர் வாழ்தல்; அதனினும் இன்னாது, இனியார்ப் பிரிவு. |
1158 பதிவிறக்கம் செய்யஉரை |
1159. | தொடின் சுடின் அல்லது, காமநோய் போல, விடின் சுடல் ஆற்றுமோ, தீ?. |
1159 பதிவிறக்கம் செய்யஉரை |
1160. | அரிது ஆற்றி, அல்லல் நோய் நீக்கி, பிரிவு ஆற்றி, பின் இருந்து, வாழ்வார் பலர். |
1160 பதிவிறக்கம் செய்யஉரை |