தொடக்கம் | ||
படர் மெலிந்து இரங்கல்
|
||
1161. | மறைப்பேன்மன் யான், இஃதோ, நோயை-இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். |
1161 பதிவிறக்கம் செய்யஉரை |
1162. | கரத்தலும் ஆற்றேன், இந் நோயை; நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். |
1162 பதிவிறக்கம் செய்யஉரை |
1163. | காமமும் நாணும் உயிர் காவாத் தூங்கும், என் நோனா உடம்பினகத்து. |
1163 பதிவிறக்கம் செய்யஉரை |
1164. | காமக் கடல் மன்னும் உண்டே;அது நீந்தும் ஏமப் புணை மன்னும் இல். |
1164 பதிவிறக்கம் செய்யஉரை |
1165. | துப்பின் எவன் ஆவர்மன்கொல்-துயர் வரவு நட்பினுள் ஆற்றுபவர். |
1165 பதிவிறக்கம் செய்யஉரை |
1166. | இன்பம் கடல் மற்றுக் காமம்; அஃது அடுங்கால், துன்பம் அதனின் பெரிது. |
1166 பதிவிறக்கம் செய்யஉரை |
1167. | காமக் கடும் புனல் நீந்திக் கரை காணேன், யாமத்தும், யானே உளேன். |
1167 பதிவிறக்கம் செய்யஉரை |
1168. | மன் உயிர் எல்லாம் துயிற்றி,-அளித்து, இரா!- என் அல்லது இல்லை, துணை. |
1168 பதிவிறக்கம் செய்யஉரை |
1169. | கொடியார் கொடுமையின் தாம் கொடிய-இந் நாள் நெடிய கழியும் இரா. |
1169 பதிவிறக்கம் செய்யஉரை |
1170. | உள்ளம் போன்று உள்வழிச் செல்கிற்பின்,வெள்ளநீர் நீந்தல மன்னோ, என் கண். |
1170 பதிவிறக்கம் செய்யஉரை |