தொடக்கம் | ||
தனிப் படர் மிகுதி
|
||
1191. | தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே, காமத்துக் காழ் இல் கனி. |
1191 பதிவிறக்கம் செய்யஉரை |
1192. | வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்-வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. |
1192 பதிவிறக்கம் செய்யஉரை |
1193. | வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே, ‘வாழுநம்’ என்னும் செருக்கு. |
1193 பதிவிறக்கம் செய்யஉரை |
1194. | வீழப்படுவார், கெழீஇயிலர், தாம் வீழ்வார் வீழப்படாஅர் எனின். |
1194 பதிவிறக்கம் செய்யஉரை |
1195. | நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ தாம் காதல் கொள்ளாக்கடை. |
1195 பதிவிறக்கம் செய்யஉரை |
1196. | ஒருதலையான் இன்னாது, காமம்; காப் போல இருதலையானும் இனிது. |
1196 பதிவிறக்கம் செய்யஉரை |
1197. | பருவரலும் பைதலும் காணான்கொல்-காமன் ஒருவர்கண் நின்று ஒழுகுவான்!. |
1197 பதிவிறக்கம் செய்யஉரை |
1198. | வீழ்வாரின் இன் சொல் பெறாஅது, உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். |
1198 பதிவிறக்கம் செய்யஉரை |
1199. | நசைஇயார் நல்கார் எனினும், அவர்மாட்டு இசையும் இனிய, செவிக்கு. |
1199 பதிவிறக்கம் செய்யஉரை |
1200. | உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய்-கடலைச் செறாஅஅய்!-வாழிய நெஞ்சு!. |
1200 பதிவிறக்கம் செய்யஉரை |