தொடக்கம் | ||
நினைந்து அவர் புலம்பல்
|
||
1201. | உள்ளினும், தீராப் பெரு மகிழ் செய்தலால், கள்ளினும் காமம் இனிது. |
1201 பதிவிறக்கம் செய்யஉரை |
1202. | எனைத்து ஒன்று இனிதேகாண் காமம்; தாம் வீழ்வார் நினைப்ப, வருவது ஒன்று இல். |
1202 பதிவிறக்கம் செய்யஉரை |
1203. | நினைப்பவர் போன்று நினையார்கொல்-தும்மல் சினைப்பது போன்று கெடும்!. |
1203 பதிவிறக்கம் செய்யஉரை |
1204. | யாமும் உளேம்கொல், அவர் நெஞ்சத்து?-எம் நெஞ்சத்து, ஓஒ! உளரே அவர்!. |
1204 பதிவிறக்கம் செய்யஉரை |
1205. | தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார் நாணார்கொல்- எம் நெஞ்சத்து ஓவா வரல்?. |
1205 பதிவிறக்கம் செய்யஉரை |
1206. | மற்று யான் என் உளேன் மன்னோ! அவரொடு யான் உற்ற நாள் உள்ள, உளேன். |
1206 பதிவிறக்கம் செய்யஉரை |
1207. | மறப்பின், எவன் ஆவன் மன்கொல்-மறப்பு அறியேன், உள்ளினும் உள்ளம் சுடும்?. |
1207 பதிவிறக்கம் செய்யஉரை |
1208. | எனைத்தும் நினைப்பினும் காயார்; அனைத்து அன்றோ, காதலர் செய்யும் சிறப்பு?. |
1208 பதிவிறக்கம் செய்யஉரை |
1209. | விளியும், என் இன் உயிர்-'வேறு அல்லம்' என்பார் அளி இன்மை ஆற்ற நினைந்து. |
1209 பதிவிறக்கம் செய்யஉரை |
1210. | விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி-வாழி மதி!. |
1210 பதிவிறக்கம் செய்யஉரை |