நினைந்து அவர் புலம்பல்
 
1201. உள்ளினும், தீராப் பெரு மகிழ் செய்தலால்,
கள்ளினும் காமம் இனிது.

1201

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1202. எனைத்து ஒன்று இனிதேகாண் காமம்; தாம் வீழ்வார்
நினைப்ப, வருவது ஒன்று இல்.

1202

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1203. நினைப்பவர் போன்று நினையார்கொல்-தும்மல்
சினைப்பது போன்று கெடும்!.

1203

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1204. யாமும் உளேம்கொல், அவர் நெஞ்சத்து?-எம் நெஞ்சத்து,
ஓஒ! உளரே அவர்!.

1204

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1205. தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார் நாணார்கொல்-
எம் நெஞ்சத்து ஓவா வரல்?.

1205

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1206. மற்று யான் என் உளேன் மன்னோ! அவரொடு யான்
உற்ற நாள் உள்ள, உளேன்.

1206

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1207. மறப்பின், எவன் ஆவன் மன்கொல்-மறப்பு அறியேன்,
உள்ளினும் உள்ளம் சுடும்?.

1207

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1208. எனைத்தும் நினைப்பினும் காயார்; அனைத்து அன்றோ,
காதலர் செய்யும் சிறப்பு?.

1208

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1209. விளியும், என் இன் உயிர்-'வேறு அல்லம்' என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து.

1209

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1210. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி-வாழி மதி!.

1210

பதிவிறக்கம் செய்ய
உரை