தொடக்கம் | ||
கனவு நிலை உரைத்தல்
|
||
1211. | காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாது செய்வேன்கொல், விருந்து!. |
1211 பதிவிறக்கம் செய்யஉரை |
1212. | கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின், கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன்மன். |
1212 பதிவிறக்கம் செய்யஉரை |
1213. | நனவினான் நல்காதவரைக் கனவினான் காண்டலின் உண்டு, என் உயிர். |
1213 பதிவிறக்கம் செய்யஉரை |
1214. | கனவினான் உண்டாகும் காமம்-நனவினான் நல்காரை நாடித் தரற்கு. |
1214 பதிவிறக்கம் செய்யஉரை |
1215. | நனவினான் கண்டதூஉம், ஆங்கே கனவும்தான் கண்ட பொழுதே இனிது. |
1215 பதிவிறக்கம் செய்யஉரை |
1216. | நனவு என ஒன்று இல்லைஆயின், கனவினான் காதலர் நீங்கலர்மன். |
1216 பதிவிறக்கம் செய்யஉரை |
1217. | நனவினான் நல்காக் கொடியார் கனவினான், என், எம்மைப் பீழிப்பது?. |
1217 பதிவிறக்கம் செய்யஉரை |
1218. | துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி, விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர், விரைந்து. |
1218 பதிவிறக்கம் செய்யஉரை |
1219. | நனவினான் நல்காரை நோவர்-கனவினான் காதலர்க் காணாதவர். |
1219 பதிவிறக்கம் செய்யஉரை |
1220. | நனவினான், நம் நீத்தார் என்பர்; கனவினான் காணார்கொல், இவ் ஊரவர்!. |
1220 பதிவிறக்கம் செய்யஉரை |