பொழுது கண்டு இரங்கல்
 
1221. மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ;-வாழி, பொழுது!.

1221

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1222. புன்கண்ணை-வாழி, மருள் மாலை!-எம் கேள்போல்
வன்கண்ணதோ, நின் துணை?.

1222

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1223. பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித்
துன்பம் வளர, வரும்.

1223

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1224. காதலர் இல் வழி, மாலை, கொலைக்களத்து
ஏதிலர் போல, வரும்.

1224

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1225. காலைக்குச் செய்த நன்று என்கொல்? எவன்கொல், யான்
மாலைக்குச் செய்த பகை?.

1225

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1226. மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத
காலை அறிந்ததிலேன்.

1226

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1227. காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி,
மாலை மலரும்-இந் நோய்.

1227

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1228. அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி, ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

1228

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1229. பதி மருண்டு, பைதல் உழக்கும்-மதி மருண்டு,
மாலை படர்தரும் போழ்து.

1229

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1230. பொருள் மாலையாளரை உள்ளி, மருள் மாலை
மாயும், என் மாயா உயிர்.

1230

பதிவிறக்கம் செய்ய
உரை