தொடக்கம் | ||
பொழுது கண்டு இரங்கல்
|
||
1221. | மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை நீ;-வாழி, பொழுது!. |
1221 பதிவிறக்கம் செய்யஉரை |
1222. | புன்கண்ணை-வாழி, மருள் மாலை!-எம் கேள்போல் வன்கண்ணதோ, நின் துணை?. |
1222 பதிவிறக்கம் செய்யஉரை |
1223. | பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித் துன்பம் வளர, வரும். |
1223 பதிவிறக்கம் செய்யஉரை |
1224. | காதலர் இல் வழி, மாலை, கொலைக்களத்து ஏதிலர் போல, வரும். |
1224 பதிவிறக்கம் செய்யஉரை |
1225. | காலைக்குச் செய்த நன்று என்கொல்? எவன்கொல், யான் மாலைக்குச் செய்த பகை?. |
1225 பதிவிறக்கம் செய்யஉரை |
1226. | மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத காலை அறிந்ததிலேன். |
1226 பதிவிறக்கம் செய்யஉரை |
1227. | காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும்-இந் நோய். |
1227 பதிவிறக்கம் செய்யஉரை |
1228. | அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி, ஆயன் குழல்போலும் கொல்லும் படை. |
1228 பதிவிறக்கம் செய்யஉரை |
1229. | பதி மருண்டு, பைதல் உழக்கும்-மதி மருண்டு, மாலை படர்தரும் போழ்து. |
1229 பதிவிறக்கம் செய்யஉரை |
1230. | பொருள் மாலையாளரை உள்ளி, மருள் மாலை மாயும், என் மாயா உயிர். |
1230 பதிவிறக்கம் செய்யஉரை |