தொடக்கம் | ||
உறுப்பு நலன் அழிதல்
|
||
1231. | சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி, நறு மலர் நாணின, கண். |
1231 பதிவிறக்கம் செய்யஉரை |
1232. | நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்- பசந்து பனி வாரும் கண். |
1232 பதிவிறக்கம் செய்யஉரை |
1233. | தணந்தமை சால அறிவிப்ப போலும்- மணந்த நாள் வீங்கிய தோள். |
1233 பதிவிறக்கம் செய்யஉரை |
1234. | பணை நீங்கிப் பைந் தொடி சோரும்-துணை நீங்கித் தொல் கவின் வாடிய தோள். |
1234 பதிவிறக்கம் செய்யஉரை |
1235. | கொடியார் கொடுமை உரைக்கும்-தொடியொடு தொல் கவின் வாடிய தோள். |
1235 பதிவிறக்கம் செய்யஉரை |
1236. | தொடியொடு தோள் நெகிழ நோவல்-அவரை, ‘கொடியர்’ எனக் கூறல் நொந்து. |
1236 பதிவிறக்கம் செய்யஉரை |
1237. | பாடு பெறுதியோ-நெஞ்சே!-கொடியார்க்கு என் வாடு தோட் பூசல் உரைத்து?. |
1237 பதிவிறக்கம் செய்யஉரை |
1238. | முயங்கிய கைகளை ஊக்க, பசந்தது- பைந் தொடிப் பேதை நுதல்!. |
1238 பதிவிறக்கம் செய்யஉரை |
1239. | முயக்கிடைத் தண் வளி போழ, பசப்பு உற்ற- பேதை பெரு மழைக்கண். |
1239 பதிவிறக்கம் செய்யஉரை |
1240. | கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே- ஒள் நுதல் செய்தது கண்டு. |
1240 பதிவிறக்கம் செய்யஉரை |